Thursday, May 24, 2012

*அறிவிப்பு


ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்
திருப்பராய்த்துறை

          அன்பர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும் ஓர் அறிவிப்பு. 

ஸ்ரீமத் சுவாமி நித்யானந்தர் மற்றும் ஸ்ரீமத் சுவாமி போதானந்தர்  மகாசமாதி 48 – ஆம் நாள் வழிபாடு 27.05.2012 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெறும். அன்பர்களும், பழைய மாணவர்களும் கலந்துகொண்டு சுவாமிஜியின் திருவருள் பெறுக.
செயலர் சுவாமிஜி.

Monday, May 21, 2012

*News



News 1:
Facebook  Social network's link created in www.rktapovanam.org Home page. See the facebook icon in the right side bottom of the Main page and click it. Refer the image given below. (See the Arrow mark)

OR
Go to this link: www.facebook.com/SwamiChidbhavananda


News 2:
All of you know that the Daily Digest email sending successfully every day. But, there is no option to subscribe your email id to receive the Daily Digest in new Website. If you want read Swami Chidbhavananda’s thoughts daily, inform through a mail to rktoldboys@gmail.com

What is Daily Digest?
One email contains Two pdf files.
1.   One is Dhinasari Dhyanam.
2.  Another one is Daily Digest.
·       One Bhagavath Geetha slokam (meaning,Swamiji’s Commentary),
·       AruL virunthu and
·       Sri ThayumanaSwami song contains in Daily Digest.

Sunday, May 20, 2012

*Swami Nithyananda's Speeches.

Today, A Audio CD release on Swami Nithyananda by Dr.Kanakaraj under Swami Rudrananda at KAP Viswanathan School, Thillainagar, Trichy. Time: 10 AM. 

All are Welcome.

Friday, May 18, 2012

*'தினமணி' தலையங்கம்


மே மாதம் 8ஆம் தேதி அன்று தினமணி நாளிதழில் அர்ஜுன் சம்பத் அவர்கள் எழுதிய தலையங்கம் பக்கத்திலிருந்து சிறு துளி....

          இராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் நித்யானந்தா என்கிற சுவாமிஜி தனது 82 வயதில் இறை நிலை எய்தி இருக்கிறார். விவேகானந்தர் நமக்களித்த தேசிய லட்சியங்களாகிய துறவு தொண்டு என்கிற விஷயங்களுக்கு உதாரணமாக வாழ்ந்தவர். திருப்பராய்த்துறை தபோவனத்தை தோற்றுவித்த சுவாமி சித்பவானந்தரை குருவாக ஏற்றுக்கொண்டு துறவு நிலையை மாணவப் பருவத்திலேயே விரும்பியவர். சித்பவானந்தர் சமாதியான பிறகு தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தபோது மறுத்தார். தன்னைவிட மூத்த சன்னியாசியான குஹானந்தரைத் தலைவராக்கினார். அதற்குப் பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தனது ஓயாத உழைப்பாலும், உறுதியாலும் தபோவன கல்வி நிறுவனங்களையும், தொண்டு நிறுவனங்களையும் மேன்மேலும் வளர்த்தார்.
          சித்பவானந்தரின் அந்தர்யோக வகுப்புகளைத் தமிழகமெங்கும் பரப்பினார். மாணவர்களைச் சிறந்த கல்விமான்களாக, ஒழுக்கசீலர்களாக உருவாக்கினார். கடந்த 9ஆம் தேதி(ஏப்ரல்) இறை நிலை எய்தினார். ஒரு துறவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் தபோவன சுவாமி நித்யானந்தா.

You can also Comment here: www.facebook.com/SwamiChidbhavananda 

Saturday, May 12, 2012

*சித்திரைத் திருவிழா - மதுரை சேவா சங்கம்


மதுரை மாநகரில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரை மாதம் நிகழ்கிறது. சென்ற வருடம் சேவை செய்ததுபோல் இவ்வருடம் மதுரை சித்பவானந்தர் சேவா சங்கத்தினர் பேராசிரியர் ராமமூர்த்தி தலைமையில் அடியார்களுக்கு நீர்மோர் வழங்கிய காட்சிகள்...

இடம்: ஸ்ரீ சாரதா சமிதி, சிம்மக்கல், மதுரை.









Thursday, May 3, 2012

*பாலம்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ‘செல்வத்துக்கு ஒருவன் பாலமாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். பாலத்தின் ஒருபுறத்தில் நீர் வந்துகொண்டிருக்கும். மறுபுறத்தில் வந்த நீர் வெளியேறிக்கொண்டே இருக்கும். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் நேர்மையான முறையில் பொருளைச் சம்பாதிக்கவும் அவ்வாறே பொதுப்பணிக்கென்று அப்பொருளைச் செலவழிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அன்பர்களுக்கு எடுத்துரைப்பார். இவர் ஒரு சமயம் தம்மிடம் பொருளைப் பற்றிய பிரச்சனை ஒன்று வந்தபோது அதனைத் தீர்த்துவைத்த பாங்கு மனத்தைக் கவரும்.
தபோவனத்தில் படித்த பழைய மாணவர் ஒருவர் இரும்புக்கடை வைத்திருந்தார். திடீரென்று இரும்பு விலை ஏறியதால் கொள்ளை லாபம் வைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இரும்பை முன்னைய விலைக்கு விற்றால் அதை வாங்கியவன் பெருத்த லாபத்தை அடைவான். இந்நிலையை எப்படி சமாளிப்பது என ஸ்ரீமத் சித்பவானந்தரைக் கேட்டான்.
சுவாமிஜியின் பதிலாவது: ஒருவனுக்கே லாபம் போகக்கூடாது; தற்பொழுது கூடியுள்ள விலைக்கே இரும்பை விற்றுவிடு. வருகின்ற லாபத்தில் உனக்கு உரியதை எடுத்துக்கொள். அதற்குமேல் உள்ள லாபத்தைப் பொதுப்பணியை நன்முறையில் ஆற்றுகின்ற பல நிறுவனங்களுக்குப் பிரித்து நன்கொடையாகக் கொடுத்துவிடு. அந்த லாபம் பலருக்கும் பயன்பட்டால் அது ஈசுவர ஆராதனை ஆகும். வாணிகத்தில் இது போன்ற எதிர்பாராத வாய்ப்பு அமையுங்காலத்தில் உனக்குப் பொருட்பற்று வாராதிருக்க இந்த முறையைக் கையாண்டுவா.