tag:blogger.com,1999:blog-5155490318405383767.post812583187717025194..comments2023-04-28T15:00:47.008+05:30Comments on Swamiji Web: *ObituaryUnknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5155490318405383767.post-81946517594352184472012-10-26T13:00:05.850+05:302012-10-26T13:00:05.850+05:30பழைய மாணவர் ஒருவர் எங்களுக்கு அனுப்பி இரங்கல் மடலை...பழைய மாணவர் ஒருவர் எங்களுக்கு அனுப்பி இரங்கல் மடலை மறுமொழியாக இங்கு பதிவேற்றுகிறோம்...<br /><br />அன்புள்ள ஐயா<br />நம் முன்னாள் தலைமையாசிரியர் திரு சோமசுந்தரம் அவர்களின் இந்த வருத்தமான செய்தியைக் கேட்டு நோகிறது.<br /><br />அவர் தோற்றமும் தலைமையும் மறக்காது. அவருடைய செவ்வியான சாய்வான ஆங்கிலக்கையெழுத்தும் யார்க்கும் கண்ணைவிட்டு அகலாது.<br /><br />அவர் என்னுடைய கொட்டைக்கையெழுத்தை எப்படிப் பொறுமையாக நோன்றார் என்று தெரியவில்லை!<br /><br />அவர் இருப்பதுபற்றித் தாங்கள் 2011-இலே நான் தமிழ்நாடு வந்தபொழுது அருள்கூர்ந்து சொல்லியிருந்தால் அவரைக் கட்டாயம் பார்த்திருப்பேன்.<br /><br />வயலூர்க்கோவிலுக்கும் வேறே நான் போயுமிருந்தேன்! பெரிய இழப்பு அவர் மறைவும் அவரைப் பார்க்கமுடியாமற் போனதுவும்.<br />அவர் குடும்பத்தார்க்கு என்போன்றோரின் இரங்கலைத் தெரிவிக்கவும்.<br /><br />1970-இலே நான் சேர்ந்தபொழுது முதல் 1978-இலே நான் முடிக்கும்வரை நம் பள்ளியின் சோலைப்பொதும்பர் இடையே உலவின அவர் உருவம் மறக்காது. ஓர் ஊழியே கழிந்துவிட்டது. அவர் அண்மைவரையிலேகூட உடலைத் திண்ணமாக வைத்திருந்துள்ளது அவர் முகம் அடையாளம் மாறாமல் தோன்றுவதினின்று தெரிகிறது.<br /><br />அவர் பூதவுடல் மறைகினும் புகழுடல் மறையாது பொலியும்.<br /><br />வாழியர் திரு சோமசுந்தரம் ஐயா அவர்கள்!<br /><br />வருத்தத்துடன்<br />பெரியண்ணன் சந்திரசேகரன்.<br />அற்றுலான்றா, அமெரிக்கா.<br />Swami Chidbhavanandahttps://www.blogger.com/profile/03963673395181374495noreply@blogger.com