Monday, September 26, 2011

*வருந்துகிறோம்


1979 – 80 ஆம் ஆண்டு நம் பள்ளியில் பயின்ற பழைய மாணவர் P. மணிமாறன், விடுதி எண் 427 திருச்சியில் கட்டுமான சங்கத்தின் தலைவராக(Chairman of Builders Association) இருந்தார். இச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் டெல்லி சென்றிருந்தார். சக பொறியாளர்களுடன் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றார். அப்போது அவர் சென்ற விமானம் நேற்று காலை விபத்துக்குள்ளானதில் அவரை நாம் இழக்க வேண்டிய துக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளதற்கு அனைவரும் மிகவும் வருந்துகிறோம். சுவாமி சித்பவானந்தரின் திருவடியில் அவரது ஆத்மா இளைப்பாற நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக. அவர் தம் குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறோம்.

இப்படிக்கு,
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை.

1 comment: