Wednesday, December 26, 2012

*ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமி - 2 (2012)


1891ஆம் ஆண்டின் துவக்கத்தில் கையில் கமண்டலமும், தண்டமும் தாங்கி பரம்பொருள் ஒன்றையே துணையாகக்கொண்டு பரிவ்ராஜக பரமஹம்சராய் சுவாமி விவேகானந்தர் புறப்பட்டுவிட்டார். பணம் எதையும் கையாளுவதில்லை, வலிய வருகிற உணவை புசிப்பது, நாளைக்கென்று எதையும் தேடி வைப்பதில்லை, பிரயாணம் செய்யவேண்டியவிடத்து யாராவது புகைவண்டிக்குச் சீட்டு வாங்கிக்கொடுத்தால் ஏற்றுக்கொள்வது, ஏனைய நேரங்களில் கால்நடையாகவே போவது என்ற ஒரு வைராக்கியத்தை கருத்தினில் வைத்துக்கொண்டார்.

சுவாமி விவேகானந்தர் கால்நடையாக காசி வந்து சேர்ந்தார். இப்புண்ணிய க்ஷேத்திரத்துக்குள் பிரவேசிக்கும்போதே அவரது உள்ளத்தில் அளவிளா ஆனந்தம் ததும்பியது. புனிதம் பொலியும் புனல் கங்கை, பக்தகோடிகளின் பெருந்திரள், அல்லும் பகலும் செய்யும் வந்தனை வழிபாடுகள் இவற்றை காணலுற்ற சுவாமிகள் பரவசமடைந்திருந்தார். தினமும் கங்கையில் நீராடி, விசுவநாதர் தரிசனம் கண்டு நிஷ்டைபுரிந்து வந்தார். அக்காலத்தில் காசியில் எழுந்தருளியிருந்த மஹான் த்ரைலிங்க சுவாமிகள், பாஸ்கரானந்த சுவாமிகள் முதலாயினோரை நமது ஞானசிங்கம் தாமே சென்று சேவித்து வந்தார்.

இந்த நிகழ்ச்சி, சுவாமி சித்பவானந்தர் அவர்களால் ‘விவேகானந்த ஜீவதம்’ என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் காசிக்கு வந்து தவம் இயற்றிய காலத்தில் சந்தித்த இரண்டு மஹான்களின் பெயர்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் மஹான் ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகளைப் பற்றி இதில் படிக்கலாம். கடந்த வருடம் 26.12.2011 அன்று சுவாமி சித்பவானந்தர் தமது நூல்களில் ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமியைப் பற்றி குறிப்பிட்டிருந்ததை பதிந்திருக்கிறோம். அதை வாசிக்க இங்கே click செய்யவும்http://rkthapovanam.blogspot.in/2011/12/blog-post_26.html

நமது இந்தியத் திருநாட்டில் இத்தகைய மகான்கள் தோன்றி பல ஜீவன்களுக்கு நல்வழி காட்டியிருக்கிறார்கள். பழுத்த பழங்கள் பூமியில் விழுவது போன்று நிறைநிலை எய்திய ஜீவன்கள், மக்களுக்கு வழிகாட்ட தோன்றுவார்கள் என்பது குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பகர்ந்த உண்மையாகும். உண்மையைப் பகர்ந்தவரே ஜீவன்முக்தரான ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமியை நேரில் பார்த்து அளவளாவியிருக்கிறார். ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமி அடைந்திருந்த அதீத நிலையைப் பற்றியும், இன்னும் பல சுவையான செய்திகளையும் கொண்ட ஒரு தொகுப்பை ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமி ஜீவன்முக்தி அடைந்த தினமான இன்று(26.12.2012, புதன்கிழமை) பதிந்துள்ளோம். ஆங்கிலத்தில் உள்ள அந்த  கட்டுரையானது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த இணையதள முகவரிக்குச் சென்றும் படிக்கலாம்.

Baba Sri Trailinga Swami
-G.N. Purandare.

I propose to give a brief life account of a Avadhoot, Shri Trailanga Swami of Varanasi who was reporter to have lived more than two hundred years. He was well known in Varanasi in the 17th and 18th Centuries. He did a number of miracles by virtue of his super-sensory perception and acquisition of Siddhis; the miracles are well known in Uttar Pradesh, Bihar and Bengal. Unlike Sadasiv Brahmendra, who was well versed in Sanskrit and in Shastras in addition to being an Avadhoot, Trailanga Swami was only an Avadhoot, but great saints like Sri Ramakrishna Paramahamsa, Sri Lahiri Mahashaya and Pandit Gopinath  Kaviraj had come in his contact and they all have testified his super – sensory powers. The well known Vasudevanand Saraswati (Tembe Swami Maharaj) is also believed to have come in his contact during his stay in Varanasi.
Sri Trailinga Swami

Trailanga Swami was born in 1607 in a small village in Andhra Pradesh. He came from a well – to – do family who owned extensive lands. The young child was exceedingly attached to course of his life. When she died and was cremated on the out – skirts of the town, the young boy did not return from the cremation ground. He lived in the ‘Smashan’ itself for some ten years. His elder brother had get a small hut constructed in the ‘Smashan’ for his younger brother to live there. He besmeared his whole body with ashes and kept only a torn cloth on his body. After 10 years he moved out on an all India pilgrimage. He visited Kailash mountain, ManaSarovar in the Himalayas. He had gone to Tibet also. He pilgrimaged the corner of the Narmada river, where at a certain Teerth he received ‘anugraha’ from a highly realized person by name Bhagiratha Swami. He then settled in Kashi. His ‘math’ was in the vicinity of old Bindu Madhav Temple. In the center of this math, which even today is in good condition, one can see a huge Shiv Linga. This huge boulder is known to have been brought by Sri Trailanga Swami from the bed of Ganga river, carrying it in his arm-pit. This temple is since then reputed as Trailangeshwar.

Trailanga Swami used to consume deadly poisons without any evil effect on his body. Thousands of Kashi people had seen him floating on the Ganga river like a raft. For days together he could remain hidden under water as well. He used to walk on burning sands of the Ghats with bare feet. He had indeed a huge body, weighing more than 300 pounds. But the great mystery was that he ate very little. He used to move about completely nude and observed ‘mauna’ in lone silence. His nudity brought him in cluthes of the Benaras Police. They put him in a cell and locked it. The huge body of the nude avadhoot was soon seen on the terrace of the prison cell. It was a mystery how he defied the lock and key.

He had travelled all over India visiting the various placed of pilgrimage. He stayed in Nepal in the courtyard of Pushupathinath temple and there he used to pass into Samadhi. Even in the Himalayan heights, he visited Mana Sarovar. From over there he came back to the Narmada Bank and stayed there for some time and then returned to Prayag; he came back to Vindhya mountain and finally settled in Varanasi. During his travels he performed several miracles. He cured incurable diseases, and made dead bodies alive again. He used to meet Chiranjeevis like Sri Dattatraya, Parasuram, Vyas and Ashwathama.

At Varanasi he came in contact with Ramakrishna, Paramanad and Dayanad Saraswathi. Once shir Ramakrishna moved out to take darshan of Trailanga Swami and reached the burning ghat on the way. It is believed that those whose bodies are burnt on the Mani Karnika Ghat, get salvation at the hands of Sri Kashi Viswanath. On reaching the Ghats Sri Ramakrishna got into Samadhi and saw the divine couple Sri Siva and Parvati standing before him – Parvati giving a bowl of nectar to Siva in his conch and Siva pouring that nectar in the ears of the burning bodies and giving them salvation. This account is recorded by his biographer, his disciple Sri Saradanand Swami. Here is a brief account of the dialogue that took place between these two realized souls.

Ramakrishna: God is one or two?
Trailanga Swami in reply showed his fore finger.
Ramakrishna: What is religion?
Trailanga Swami: Nothing but truth.
Ramakrishna: What is the duty of a living soul?
Trailanga Swami: To see in his own soul the divine soul or universal soul and serve him.
Ramakrishna: What is love?
Trailanga Swami: To worship your own deity by all the modes (nine in number) of bhakthi and to get into ecstasy until tears start flowing from your eyes.

The great Avadhoot had predicted the day of his demise. Before that he assembled a meeting of learned Pandits; had discussion with them and then gave instructions for a wooden box to be brought. He told his disciples as to how he was to be given a ‘Jala Samadhi’. In the box, then, he sat in ‘Padmasan’ and got it closed by placing a huge boulder over it. The box with its cover was then taken into the Ganga river, where it is said that it did not sink but floated over water and after some time a huge glow of divine light started coming out from the inside of the box and proceeded in upward direction. Thousands of people who had gathered there saw this huge beam of divine light in the sky. This was in the year 1881. The stories of Sri Trailanga Swami are quite well known in Uttar Pradesh and reference can be had to old editions of Beneras District Gazeteer. European Civilians had several experiences about his miracles.

Saturday, December 22, 2012

*சுவாமி நித்யானந்தரின் பிறந்தநாள் - 2012



இன்று(22.12.2012, சனிக்கிழமை) சுவாமி நித்யானந்தர் பிறந்த தினம் ஆகும். அவருடைய பிறந்த தினத்தன்று அவரது நினைவாக கவிதை ஒன்றை பதிவேற்றியிருக்கிறோம். கவிதையை இயற்றியவர் - ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் மு. சொக்கப்பன் அவர்கள்.

நித்யானந்தர் பெரும்புகழ் அளாவிய பேரருள் ஞானி 


தென்னைபலா வாழைஎனத் தேர்ந்திசைக்கும் காவேரி 
தென்கரையில் தபோவனத்தாய், தவமியற்றும் தவச்சாலை 
தவச்சீலர் நாளுமிங்கே தவமிருக்கும் பராய்த் துறையில் 
தண்ணிக ரற்ற பெரும் தவ முனி சித்பவானந்தர் 
அன்னவரின் சீடர்களுள் அருந்தவமாய் வந்துதித்த 
நித்தியானந்தரவர், நிகரில்லாப் பெருந்துறவி 
சித்பவா னந்தரும், சிந்தனைகள் அத்தனையும் 
பட்டிதொட்டி எங்கணுமே பரப்பியவர் சுவாமிகளே  

காவியுடை, தூயமனம், களங்கமிலா அன்புமுகம்,
யாவரையும் சமநோக்கு, கண்களிலே ஒளிவிளக்கு 
கங்கைநதிப் பிரவாகம், கருத்துக்களின் பெருவெள்ளம் 
கறந்தபால் கறந்தாற்போல் கவினுறும் தூயவுள்ளம் 

குருநாதர் வழிநின்று குக்கிராமங்கள்தோறும் 
சத்சங்கம் யோகமெனப் பக்தர்களுக் கருளியவர் 
பந்தபாச மென்னும் பாழுங்கிணற்றில் மூழ்காமல் 
அந்தர்யோக மென்னும் அருமருந்தை வழங்கியவர் 
மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை உள்ளிட்ட 
மூவாசை வென்றெடுத்த முனிவர்க்கும், முனிவரிவர் 
இனிப்பும் கசப்பும் ஒன்றெனவே கண்ட மகான் 
எளிமையும் தூய்மையும் இயல்பாகக் கொண்ட மகான் 

குருவழி ஒன்றையே கொள்கையாய்க் கண்டவர் 
ஒன்றே கொள்கை, ஒருவரே குருவென 
அன்றே தேர்ந்த பேரறி வாளர் 
வேதாந்த தத்துவத்தை வீதிகள் தோறும் 
விதைத்த மகாத்மா நித்தியானந்தர் 
அண்டி வந்தோர்க்கெல்லாம் அடைக்கலம் அருளிய 
அடியவர் நலன்காத்த ஆன்மீக வள்ளலார் 
அவரால் உயர்ந்தோர் ஆயிரமாயிரம் 
அனைவரும் அறிவோம், அதுவே சத்தியம் 
நித்தியானந்தரை நினைவிலே கொள்ளுவோம் 
எத்துயர் வந்தாலும் எதிர்கொண்டு வெல்லுவோம்.

Wednesday, December 19, 2012

*Old Boys Association 2012 Invitation


Dear Old Students of Tapovanam,

All of you are invited to participate in the 54th Old Boys association, to be held on 23 December 2012, Sunday @ Sri Ramakrishna Tapovanam, Thirupparaithurai.

Welcome to Tapovanam and get blessings of Sri Periyasami.

-The Secretary,
Old Boys Association,
Thirupparaithurai.

Wednesday, December 12, 2012

*25.12.2012 தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் நமது வித்யாவனத்தைப் பற்றி வெளியான கட்டுரை.





இந்த கட்டுரைக்கு விகடன் இணையதளத்தில் வந்துள்ள மறுமொழிகள்:
Comment - 1:
எஸ்.செல்வி
மாணவர்கள் ஒன்றும் பெரிதாக விவசாயம் செய்யத் தேவையில்லை. தான் பள்ளியில் சேர்ந்தவுடன் தனது பள்ளியில் ஒரு மரக் கன்றை நட வைத்து அதனை அந்த மாணவனையே வளர்த்து வரச் செய்யலாம். அதைப் பார்த்துப் பார்த்து அந்த மாணவர் மகிழ்ச்சியடைவதுடன் பள்ளி வளாகமும் இயற்கை வளாகமாக மாறும். 
Comment - 2:
 Sreeram
வாழ்த்துக்கள்.

இந்த கட்டுரையை எழுதியவர் பெயர் பி. விவேக் ஆனந்த். நம் பள்ளியின் பழைய மாணவர் ஆவார். சென்னை ஜே.ஜே. கல்லூரியில் பயின்று வருகிறார். விகடன் பத்திரை நிறுவனம் நடத்தும் ‘மாணவர் பத்திரிக்கையாளர்’ போட்டியில் தேர்வு பெற்று இந்த கட்டுரையை எழுதியிருக்கிறார். அவர் பத்திரிக்கைத் துறையில் பல சாதனைகள் படைக்க பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 

Tuesday, November 27, 2012

*Announcement:

The Television program of Mr.M. Meenakshi Somasundaram (Hostel Number - 369) 1977 - 78 will be replayed on Wednesday 28.11.2012 Tomorrow between 11 to 11:30 PM in the Podigai Channel. Interested students can watch that program of Our old student.

-Admin.

Friday, November 16, 2012

*மஹாசமாதி கட்டுரை - 2


(November 16 இன்று சுவாமி சித்பவானந்தர் மஹாசமாதி தினம் ஆகும்.)


கங்கையும் காவிரியும் கொண்டாடிய ‘சித்’பவானந்தர்

சத், சித், ஆனந்தம் என்பது ஆன்மிக சூத்திரம். ‘ஆனந்தநிலை நமது சொரூபம். நாம் பாபிகள் அல்ல’ என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு, ‘ஆனந்தமாக இருங்கள்’ என்று தன்னைத் தேடிவந்த அன்பர்களை ஆசிர்வதித்தவர் சுவாமி சித்பவானந்தர்.
‘ஆனந்தமாக இருங்கள்’ என்ற இந்த இரண்டு வார்த்தகளை திருடி வைத்துக்கொண்டு உலகம் முழுதும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக்கொண்ட ஆன்மிக வியாபாரிகளும் இங்கு உண்டு.

“செல்வம் இருக்கின்ற இடத்தில் ஊழல் வந்து உட்கார்ந்து கொள்ளும்” என்பது சுவாமி சித்பவானந்தரின் கருத்து. சென்ற நூற்றாண்டில் ஆன்மிக மறுமலர்ச்சியாக ‘அந்தர்யோகம்’ என்ற போலி சடங்குகளற்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சுவாமி சித்பவானந்தர்.

பாதபூஜைக்கு லட்சங்களைக் கேட்காதவர்; எந்த சொத்துக்களையும் எழுதிக்கொடு என்று கட்டளையிட்டு அறியாதவர்; கயிலாயம் போக காசு பணம் வேண்டியதில்லை என்பதை உணர்ந்த யோகி சுவாமி சித்பவானந்தர். பணத்திற்காக கொள்கையில் சலுகை காட்டாதவர் நம் சுவாமி.

பணம் கொழிக்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்று பூட்டுப்போட்டவர் நம் சுவாமி. அரசாங்கம் கேட்டுக்கொண்டாலும் அதில் நியாயம் இல்லையென்றால் அதை ஏற்காத ஞானி நம் சுவாமி. பள்ளிகளுக்குத் துணைப்பாடமாக தாம் எழுதிய நூலில் விரவிக்கிடந்த ஸம்ஸ்கிருத சொற்களை நீக்கி, தமிழ் ஆக்கிக் கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியபொழுது அதை ஏற்க மறுத்த மும்மொழிக் கொள்கைச் சிங்கம் நம் சுவாமி.

மரம், செடி, கொடி போன்ற மனத்தை உடையவர் அல்ல நம் சுவாமி. எதற்கும் அசையாத மேரு! அன்பிற்கு மட்டுமே உருகும் கயிலாய மலை நம் சுவாமி. ஆங்கிலம் படித்தவர், ஐ.சி.எஸ் ஆக வேண்டியர்; சந்நியாசி ஆகிவிட்டார் என்று சுவாமிகளை மதிப்பீடு செய்தால் தோற்றுப்போவார்கள்.

‘அவனவன் நிலையில் அவனவன் பெரியவனே’  என்பதை உணர்ந்தவர் நம் சுவாமி. சுவாமி விவேகானந்தரை படிக்கவில்லை; அவராகவே மாறியவர் நம் சுவாமி. துறவை காதலித்து ஏற்றுகொண்டு தாயுமானவரைக் கொண்டாடியவர். படிக்காதவர்களை அவர் வெறுத்ததில்லை; பண்பாடில்லாதவர்களின் முகத்தில் அவர் விழித்ததில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னை இழந்ததில்லை என்பதுதான் அவர் வரலாறு.
சுவாமிகளின் நூல்களை அரசுடைமை ஆக்க வேண்டும். அடுத்த அரை நூற்றாண்டுக்குத் தேவையான சிந்தனைகளை அரை நூற்றாண்டுக்கு முன்பே விதைத்தவர் நம் சுவாமி. ஒருங்கிணைந்து நாம் செயல்படாவிட்டால் காலக் கரையானின் கோர வாய்க்குள் விலையில்லா மாணிக்கங்கள், முத்துக்கள், வைரங்களெல்லாம் போய்விடும். தலைமுறைகள் தழைக்க கங்கையும் காவிரியும் கொண்டாடிய நம் சுவாமிகளின் நூல்களை மட்டுமல்ல, பத்திரிக்கையையும் பாதுகாக்க வேண்டும். இதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் தொண்டாகும். நம் சுவாமிக்கு நாம் செய்யும் மரியாதையாகும். இதுவே, அவர் தோள் மீது தோரணமாய்த் தொங்கி விளையாடியவர்களின் பணியாகும்.

வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவன்
-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.
(இந்த கட்டுரையை எழுதிய அன்பரின் பெயர் R. ராமகிருஷ்ணன். தபோவன அச்சுப்பள்ளியில் பணியாற்றி வந்தவர். இப்போது சேலம் ‘தினமலர்’ பத்திரிக்கையில் பணியாற்றி வருகிறார்.)

Thursday, November 15, 2012

*ஆட்கொண்ட வள்ளல் (மஹாசமாதி கட்டுரை - 1)



ஆட்கொண்ட வள்ளல்

(நமது வித்யாவன ஆசிரியர் வ. சோமு அவர்கள் பெரிய சுவாமிஜி சித்பவானந்தரிடம் ஏற்பட்ட அனுபவங்களை கட்டுரையாக விஜயபாரதம் தீபாவளி மலரில் வெளியிட்டிருந்தார். நாளை ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் மஹாசமாதி தினத்தை முன்னிட்டு அந்த கட்டுரை இங்கு பதிவாகிறது.)

1962ஆம் ஆண்டு, அப்போது எனக்கு வயது 12. நான் தர்மபுரியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தந்தையாரின் நண்பர் ரெங்கநாத செட்டியார் என் தந்தையிடம் வந்து “பையனை கொஞ்சம் என் கூட அனுப்பி வை. சாமியார் வரார்! மேடையில் நாற்காலி டேபிள் போடணும். சுத்தமாய் வைக்கணும்” என்றார். அப்பாவும் என்னை அனுப்பி வைத்தார். நான் எங்கள் ஸ்கூலுக்கு (ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி) சென்று மேடையில் நாற்காலி, மேசை போட்டு டேபிள் கிளாத் மேலே போட்டு,  நாற்காலி மேலே வெல்வெட் விரித்துக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அலங்காரம் தேவையோ?” என்று எனக்கு பின்னால் ஒரு குரல். பின்னால் பார்த்தேன். ஒரு சாமியார் எனது கன்னத்தில் தட்டினார். அது தான் முதல் ஸ்பரிசம். வெல்வெட் துணி அப்புறப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. கிரிதாரிபிரசாத் ஒரு மணி நேரம் முழங்கினார். பிறகு சாமியார் ஒரு நேரம் பேசினார்.
சுவாமி சித்பவானந்தர்
ஆரவாரமான, உணர்ச்சி பிழம்பு போன்ற கிரிதாரிபிரசாத்தின் பேச்சுக்குப் பிறகு சுவாமி பேசினார். “மழை பெய்து ஓய்ந்தது. சற்றே ஈரம் வற்றியபின் உங்கள் மனவயலை உழுது விதை விதைக்கலாம் என்று இருக்கிறேன்” என்று தன் பேச்சை துவக்கினார். இந்த இரண்டு வரிகள் ஐம்பது ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் நினைவில் உள்ளது.

சமரச சன்மார்க்க சங்கம் சார்பாக நடந்த கூட்டம் அது. இதுதான் முதல் சந்திப்பு. ஒவ்வொரு ஆண்டும் அந்தர்யோகமும், சன்மார்க்க சங்க கூட்டமும் நடக்கும். அதற்கு வருவார். அப்போது எனக்கு அழைப்பு வரும் (வேலை செய்ய). அவர் பெயர் சித்பவானந்த சுவாமிகள் என்று சொன்னார்கள். என்னுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். ஓரளவு பழகினார். ரொம்ப ரிசர்வ்டாக இருந்தார். மேடையில் கூட கடிவாளம் போட்ட குதிரைதான். வாரியார் பேச்சுப்போல் அங்கிங்கு திரும்பாமல், ஸ்பின்னிங் மில் ஓடுவது போல ஒரே சீராக இருக்கும். எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றி மட்டுமே பேச்சு இருக்கும்.

நான் டிகிரி படித்து முடித்தவுடன் அவரிடம் சொன்னேன். அடுத்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கு சென்று சேர் என்றார். அவர் பேச்செல்லாம் ஒரே ஆர்டர் மயம்தான். நான் இந்த வருஷமே போய் சேருகிறேன் என்று சொன்னேன். அவர் இரண்டு வேலைகள் பாக்கியிருக்கு. அது முடியட்டும் என்றார். அந்த ஓராண்டில் என் தகப்பனாரும், அதன்பின் தொடர்ந்து என் தாயாரும் வைகுண்ட பதவியை அடைந்தனர். அதனால் சுவாமி சொன்ன இரண்டு வேலைகள் இதுதான் என உணர்ந்துகொள்ள முடிந்தது. இது எனக்கு மிராக்கிள் போல இருந்தது.

என்னுடைய டிகிரியை எடுத்துக்கொண்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷனுக்கு சென்று சுவாமி சோமானந்தா முன்னால் ஆஜர் ஆனேன். அவர் கேட்டார். “உன்னை யார் அனுப்பியது?” நான் “சுவாமி சித்பவானந்தர்”. அவர், “ஓ அப்படியா. சரி அப்பிளிகேஷன் போடு கிடைக்கும்” இந்த சுவாமி ஊட்டி ஆசிரமத்தில் சித்பவானந்தரிடம் பிரதராக இருந்தார் என பின்னால் தெரிந்தது. அங்கு சேர்ந்துவிட்டேன். அதன்பிறகு அவினாசிலிங்கம் ஐயா பழக்கமானார். ஆனால் அவரும் சித்பவானந்தரும் தோழர்களாக இருந்து மனஸ்தாபத்தில் முப்பது ஆண்டுகளுக்குமுன் பிரிந்தவர்கள் என தெரியாது.

ஒரு நாள் பி.கே. நடராஜன், அவர்கள் இருவரும் இணைவதற்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது சுவாமி அங்கு வந்திருந்தார். நான் சுவாமியைப் பார்க்கச் சென்றேன். சுவாமி “படிப்பு நடக்குதோ?” நான் “ஆம் சுவாமி”. சுவாமி “படிச்சுட்டு அங்கு (திருப்பராய்த்துறை) வந்துட வேண்டியது”. நான் “அங்க இடம் இருக்கா?” சுவாமி “தானாக வரும்”. இந்த உரையாடலின்போது சுவாமி குகானந்தா உடனிருந்தார்.
அமரர் அவினாசிலிங்கம்
அதன்பின் வித்யாலய ஆடிட்டோரியத்தில் இணைப்பு விழா நடந்தது. 4000பேர் – அனைத்து ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் – மாணவர்கள் – ஊழியர்கள் வந்திருந்தனர். அமரர் அவினாசிலிங்கம் – அந்த மேடையில் சுவாமியை விட்டு அவர் பிரிந்தது குறித்து தேம்பி தேம்பி அழுதார். உடனே சுவாமி, “இங்கு அழுகை, கூக்குரல், ஒப்பாரி வைக்க அனுமதியில்லை. பேச வேண்டிய விஷயத்தை பேசிவிட்டு வந்து அமரலாம்” என்றார். அவினாசிலிங்கம் ஐயா அடங்கிப்போனார். அந்த கேம்பஸில் ஐயா அடங்கிப்போனது அதுவே முதல் முறை. படிப்பு முடிந்தது. ரிசல்ட் வருவதற்கு முன்பே சுவாமி நித்யானந்தரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆசிரியர் ஒருவர் இறந்துவிட்டதால் காலியான வேலைக்கு நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு. தானாக வரும் என பெரிய சுவாமி சொன்னது நினைவுக்கு வந்தது. மீண்டும் சுவாமியை பார்த்தேன். சுவாமி, “என் மூலமாக வருகிறீர்கள் என்று தலைமை ஆசிரியரிடம் கூறக்கூடாது. தகுதியிருந்தால் செலக்ட் ஆகலாம்.” பள்ளிக்குச் சென்று குளோரின் என்ற பாடம் சொல்லிக்கொடுத்தேன். 14பேர் வந்திருந்தார்கள். எனக்கு போட்ட மதிப்பெண்கள் அதிகமாயிருந்ததால் பணிக்குச் சேர்ந்தேன். சுவாமியிடம் போய் ஆசி வாங்கினேன். அப்போது கேட்டார், “தலைமையாசிரியரிடம் ஏதாவது சொன்னீர்களா?” நான் “இல்லை” என்றேன்.

தினந்தோறும் காலையில் சென்று பாதநமஸ்காரம் செலுத்துவேன். “ஊம்” என்று ஒரு சிங்க கர்ஜனை மட்டும் கேட்கும். நம் மேல் பார்வை விழும். அவ்வளவுதான். அதற்கு மேல் நேரெம் ஒதுக்கமாட்டார். என் பிறந்தநாள் அன்று மட்டும் “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ்” என்று சொல்லுவார். ஒவ்வொரு நிமிஷமும் உபயோகமாக செலவிடுவார். காலையில் எழுந்திருந்து தன் துணிகளை தானே துவைத்து குளித்து முடித்து கோயிலை திறந்து திருப்பள்ளியெழுச்சி, கீதை, நாமாவளி, தியானம் முடித்து, சிறுவர்கள் உடற்பயிற்சியை பார்வையிட்டு அதன் பின் நடைப்பயிற்சி முடிப்பார். ஆஜர் எடுத்து, மாணவர்களோடு சாப்பிட்டு, ஹிந்து, எக்ஸ்பிரஸ் இரண்டும் படித்து முடித்து, பின் கடிதங்களுக்கு பதிலெழுதி, ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, உச்சிகால வழிபாட்டில் வழிபாடு, தியானம், உணவு ஓய்வு முடித்து மீண்டும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி முடித்து, மாலை பள்ளிக்கு கான்வாஸ் ஷூ அணிந்து  செல்வார். மாலைப் பிரார்த்தனை, தியானம், சிறு வகுப்புப் பிள்ளைகளுடன் உணவு, சத்சங்கம் முடித்து, இரவு 10.30 மணிக்கு உறங்கச்செல்வார். இந்த நடைமுறைகள் இறுதிவரை மாறவில்லை. சுகவீனம் அடைந்தபோதும் தொடர்ந்தன. கிழக்கு நோக்கியுள்ள ராமகிருஷ்ணர் கோயிலில் வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்வார். வடக்கு நோக்கி ஸ்நானம் செய்வார். தெற்கு நோக்கி உணவு உட்கொள்வார். மேற்கு நோக்கி அலுவல் புரிவார். இறுதிவரை இந்த திசைகள் மாறியதில்லை.

1984-85 GROUP PHOTO  
சுவாமி சித்பவானந்தர் இறுதியாக எடுத்துக்கொண்டது

(இந்த கட்டுரையை எழுதியவர் மேலே உள்ள புகைப்படத்தில் முதல் வரிசையில் இடமிருந்து வலமாக 7ஆவது இடத்தில் அமர்ந்திருக்கிறார்.)
டைனிங் ஹாலிலும் சரி, அட்டெண்டன்ஸ் எடுக்கும்போதும் சரி மாணவர்களை உச்சிமுதல் உள்ளங்கால் வரை கூர்ந்து நோக்குவார். பொறுமையிழந்த நான் ஒரு நாள் அவரிடம் சென்று, “அப்படியென்ன தேடுகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்?” எனக் கேட்டேன். அவர் பதில் “விவேகானந்தரைத் தேடுகிறேன்” நான், “கிடைத்தாரா?” அவர் உதட்டைப் பிதுக்கினார். (இல்லையென்று சொல்லவில்லை). ஒரு  நாள் ஆசிரியர் கூட்டத்தில் “இவ்வளவு காலமாக குருகுலம் நடத்துகிறோம். ஒரு மாணவன் கூட துறவியாக வரவில்லையே? இவர்களை துறவி ஆக்கும் அளவுக்கு நமக்கு தகுதியில்லையோ?” என அங்கலாய்த்துக்கொண்டார்.

அவருடைய மூச்சு – பிராணன் முழுவதும் வித்யாவனத்திலிருந்தது. நான் திண்டுக்கல்லில் ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் பெயர் மௌனகுருசாமி. வயது 80 இருக்கும். 1947-47ல் அங்கு படித்தவர். திண்டுக்கல் சௌந்தரராஜா மில்லின் மேலாளராக இருந்தார். அவர் சொன்னார், “சுவாமி காலையில் எங்களை காவிரி ஆற்றுக்கு அழைத்துச் சென்று நன்றாக தேய்த்து குளிப்பாட்டுவார் (ஸ்பரிச தீக்ஷை). எங்க அம்மா கூட என்னை அப்படி குளிப்பாட்டியதில்லை” எனக் கண் கலங்கினார். லட்சுமண சுவாமி என்ற மாணவர் சொன்னார், “கோவை ஆசிரமத்திற்கு காரில் செல்லும்போது சுவாமி இரண்டு மாணவர்களை உடன் அழைத்துச் செல்வார். ஒருமுறை நான் சென்றிருந்தேன். போகும்போது ராமாயணம், வரும்போது பாரதம் சொல்லி முடித்துவிடுவார். கதை கேட்டுக்கொண்டே அவர் மடியில் தூங்கிவிடுவேன். என் தாயாரின் மடியில் கூட நான் அவ்வளவு பரமானந்தம் அடைந்ததில்லை. அவர் மடியில் எனக்குக் கிடைத்த நிம்மதியை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்” என்றார்.

ஸ்ரீ விவேகானந்த வித்யாவன உயர்நிலைப்பள்ளி

பள்ளிக்கூடத்தை வித்யாவனத்தாய் என்று நான் நினைத்தது தவறு. 䮚ுவாமிதான் வித்யாவனத்தாய் என்பது புரிந்தது. வித்யாவனத்தாயாக தாயின் கடமையையும், குலபதியாக தந்தையின் கடமையையும் ஒருங்கே ஆற்றியது நம்ம சுவாமிதான். “தந்தை தாயும் நீ என்னுயிர் துணையும் நீ” என்ற பாட்டுக்குப் பொருத்தம் சுவாமிதான்.

ஊட்டியிலிருந்து நடந்தே திருப்பராய்த்துறை வந்தபோது கையில் வெறும் நான்கணாதான் வைத்திருந்தார். ஆனால் இப்போது ஒரு பெரிய சாம்ராஜ்யமே உருவாகிவிட்டது. அதன்கீழ் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் 18 மடங்களும், 60 பள்ளிகளும் 7 கல்லூரிகளும் உள்ளன.
பள்ளியில் 75-76ஆம் கல்வியாண்டில் ஓர் அறிவியல் பொருட்காட்சி வைத்திருந்தேன். சுவாமி உள்பட பெரியவர்கள் அனைவரும் பாராட்டினர். சுவாமி தனிப்பட்ட முறையில் என்னை பாராட்டினார். அதைத் தொடர்ந்து பரமஹம்சரின் விஞ்ஞான விளக்கங்களை தர்மசக்கரம் பத்திரிக்கையில்  எழுதச் சொன்னார். நான் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் என்ற தலைப்பில் 15 மாதங்கள் எழுதினேன். செய்து கற்றல் என்ற தத்துவ அடிப்படையில் 8ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்புகளை சுவாமியை வைத்து துவக்கினேன். பி.எச்.இ.எல் தலைவர் தீனதயாளன் இதை துவக்கி வைத்தார். தமிழகத்தில் எந்த பள்ளியிலும் இந்த வசதி அந்த காலகட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் திரு.ஜி. விஸ்வநாதம் அவர்களுடைய மகன் டாக்டர் வி. ஜெயபால் அவர்கள் பள்ளியில் அறிவியல் கழகத்தை 1974ல் துவக்கி வைத்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மெடிக்கல் காலேஜ் டீன், கல்லூரி துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வித்தகர்கள் இப்படி  ஒருவரை அழைத்து வருவேன். எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு விஞ்ஞான தொடர்சொற்பொழிவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. தபோவன அன்பர், அமரர் திருச்சி டி.பி. சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின்படி பள்ளியில் போட்டோகிராபிக் கிளப் செயல்பட்டது. டிரான்சிஸ்டர் ரேடியோ செய்ய மாணவர்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். அந்த காலகட்டத்தில் எந்த உயர்நிலைப்பள்ளியிலும் இவ்வளவு வசதிகள் இருந்ததில்லை. இவ்வளவுக்கும் சுவாமிதான் எனக்கு ஊக்கம் கொடுத்தார். சுவாமி நித்யானந்தரும் நல்ல ஊக்கம் கொடுத்தார். எனது ஆன்மீக வளர்ச்சிக்கு இவரும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்.

சுவாமிஜியும், முதலமைச்சரும்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராயிருந்த போது சேலம் சாரதா கல்லூரி விழாவுக்கு காலதாமதமாக வந்தார். மன்னிப்பு கேட்டார். பின்பு எம்.ஜி.ஆர் அவருக்கு பாத நமஸ்காரம் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தாயுமானவர்
இராமநாதபுரத்தில் தாயுமானவருக்கு சமாதி கோயில் கட்ட ஏற்பாடு ஆனது. அதில் வைக்க தாயுமானவர் சிலைக்காக வடிவமைப்பு பற்றி சுவாமி யோசித்தார். வித்யாவன மாணவர்கள் அனைவரையும் வரிசையாக பரிசோதனை செய்து சிலரை தேர்ந்தெடுத்தார். கண்ணுக்கு ஒரு மாணவனையும் காதுக்கு ஒருவனையும் உடல்வாகுக்கு ஒருவனையும் தேர்ந்தெடுத்து சிற்பியை அழைத்து இந்த சாமுத்ரிகா லக்ஷணப்படி சிலை அமைக்கச் சொன்னார். அதன்படி சிலையும் நன்கு அமைந்தது.

சுவாமிக்கு உடல்நலம் குன்றியபோது மருத்துவர்கள் கொடுத்த குழாய் மாத்திரைகளை பிரதர் நாகசுந்தரம் கொடுத்தார். ஒருநாள் கருப்பு சிகப்பு வண்ணத்தில் இருந்த குழாய் மாத்திரைகள் இரண்டு கொடுக்கப்பட்டது. அதை சுவாமி வாயில் போட்டு தண்ணீரை குடித்தார். “ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு” என்று சொல்லி சிரித்தார். உடன் இருந்தவர்களும் சிரித்தனர். அதாவது நாத்திக வாதத்தை சுவாமி விழுங்கிவிட்டதாக பொருள்.

செப்டிக் டேங்க் சுத்தப்படுத்த ஆட்கள் வரவில்லை. பள்ளி திறந்துவிட்டால் குழந்தைகள் வந்தபின்பு இந்த வேலைகளை வைத்துக்கொண்டால் அவர்களுக்கு சிரமம். “ஆட்கள் வரவில்லையே எப்படி சுவாமி சுத்தப்படுத்துவது?” என்றனர். “இதோ இப்படித்தான்” என்று கூறி சுவாமி மலக்குழிக்குள் குதித்துவிட்டார். பக்கெட்டில் மனிதக் கழிவுகளை தானே எடுத்து அப்புறப்படுத்தினார். அதன்பின் மற்றவர்களும் வேலையில் இறங்கினர்.
பழனி முருகன்
ஒருமுறை பழனி முருகனை தரிசிக்க சுவாமி மலையேறிக்கொண்டிருந்தார். பாதிதூரம் கடந்துவிட்டார். ஸ்ரீ சாது சுவாமிகள் மேலேயிருந்து கீழே வந்து கொண்டிருந்தார். சுவாமியை பார்த்து “தரிசினத்துக்கோ?” என்றார் சுவாமி. “ஆமாம் சுவாமி” சாது, “சரி வாருங்கள். உங்களுக்காக நானும் திரும்ப மலையேறுகிறேன்” என அழைத்துச் சென்றார். “உமக்கு எந்த கோலத்தில் தரிசனம் வேண்டும்?” என்று கேட்டார், சுவாமி. “நமக்கேற்ற கோலத்தில்தான்” என்றார் (அதாவது ஆண்டிக்கோலம்). பொதுஜன தரிசனம் ஒருமணி நேரம் நிறுத்தப்பட்டு மூலஸ்தானத்தில் சுவாமியை அமர வைத்து தியானம் செய்ய வசதி செய்து தரப்பட்டது.

1980-ல் மாணவர்கள் வரிசையாக நின்று சாமியிடம் ஆஜர் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பையன் துடுக்காக, “சுவாமி நீங்க இன்னும் எவ்வளவு நாள் இருப்பீங்க?” என்று கேட்டான். அதற்கு சுவாமி சிறிதும் அதிர்ச்சியடையாமல், “இன்னும் 5 வருஷம்” என்றார். அதே போல் 5 வருஷம்தான் இருந்தார்.

ஒருமுறை ஓர் அழகான கலைநயமிக்க பூந்தோட்டத்தை உருவாக்கியிருந்தேன். குருதேவர் ஜெயந்தி விழாவுக்காக அதை செய்திருந்தேன். அதனருகில் தோட்டத்தை ரசிக்கும் மக்கள் தோட்டக்காரனை நினைத்துப் பார்ப்பதில்லை. உலகை அனுபவிக்கும் மக்கள் அதை படைத்த இறைவனை நினைப்பதில்லை என்ற வாசகத்தோடு போர்டு வைத்திருந்தேன். சுவாமி அந்தப் பக்கமாக வந்தார். தோட்டத்தை ரசித்துப் பார்த்தார். பலகையில் எழுதியிருந்ததையும் படித்தார். என் அருகில் வந்து “நான் உங்களை நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு சிரித்தார்.

சுவாமி உடல்நலமில்லாதபோது பாலகிருஷ்ணன் என்ற மாணவர், சுவாமியிடம் “நீங்க பெரிய ஞானிதானே?” என்றார்.
சுவாமி: அப்படி சொல்லிக்கிறாங்க.
பாலு: அப்படின்னா உங்களுக்கு வந்துள்ள நோயை உங்க தவவலிமையால் குணப்படுத்துங்க சாமி.
சுவாமி: அது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். சரீர விஷயங்களில் நாம் தலையிடுவதில்லை என்று கூறி தாம் ஆத்ம சொரூபம் என்பதை நிரூபித்தார்.
வித்யாவனத் தாய்