Thursday, April 25, 2013

*Temple Renovation Notice published in www.shaivam.org


சைவ சமயத்தைப் பற்றித் தேவையான அனைத்துத் தகவல்களும் கிடைக்கும் ஒரே இணையதளம் www.shaivam.org ஆகும். 

இங்கு சைவ சமயத்தின் தத்துவம், வழிபாட்டுமுறை, திருக்கோயில்கள் தென்னாட்டில் உள்ளவை; வடநாட்டில் உள்ளவை, 63 நாயன்மார்கள், சைவ சமயக் குரவர்கள் பலர்  பற்றிய வரலாறு, சமீபத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் 12 திருமுறைகள் தல வரிசை, பாடல் எண் வரிசை என்று அனைத்தும் கிடைக்கின்றன. 

வைணவ சமயத்திற்குச் செல்லும் linkகளும் உள்ளன. இணையதளத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வாசிக்கும் வசதி உள்ளது. 

திருப்பராய்த்துறை திருக்கோயிலின் குடமுழுக்கு சம்பந்தமான Notice ஒன்றை Temple Renovation பகுதியில் பதிவேற்ற வேண்டுமாய் www.shaivam.org இணையதளத்தைக் கேட்டிருந்தோம். Noticeஐ அனுப்பி இருந்தோம். அது சித்திரைத் திருவிழா நாளான இன்று பதியப்பட்டுள்ளது. 


நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.

-பழைய மாணவர்கள் சங்கம்,
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை-639115.
திருச்சி மாவட்டம்.

Tuesday, April 9, 2013

*மகாசமாதி நினைவு கூறுதல்

இன்று சுவாமி நித்யானந்தர் அவர்கள் மகாசமாதி அடைந்த தினம் ஆகும். அவர் மகாசமாதி அடைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. அப்பொழுது நடைபெற்ற இறுதி நிகழ்வுகளை இதே தளத்தில் புகைப்படங்களாக பதிவேற்றியிருந்தோம். நம்மில் பலர் அந்த புகைப்படங்கள் பார்த்திருந்தாலும் பார்க்காதவர்களுக்காகவும், சுவாமி நித்யானந்தர் அவர்களைப் பற்றி நினைவு கூறவும் இங்கு மீண்டும் அந்த LINK கீழே தருகிறோம். CLICK செய்து சென்று பார்க்கவும்.

http://rkthapovanam.blogspot.in/2012/04/blog-post.html

Saturday, April 6, 2013

*S.K.M. மயிலானந்தன் அவர்கள் 'பத்மஸ்ரீ' விருது பெறுதல்.



உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், தொழிலதிபர், ஒழுங்காக வருமானவரி செலுத்தியதற்காக விருது பெற்றவர், ஈரோடு சித்பவானந்தர் சேவா சங்கத்தின் ஆலோசகருமான திரு S.K.M. மயிலானந்தன் அவர்களுக்கு, நம் இந்திய தேசத்தின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் "பத்மஸ்ரீ" விருது வழங்கி கௌரவிக்கிறார்.

அவரது சீரிய பணிகளுக்கு எங்களது சிரம் தாழ்ந்த  வணக்கங்களும், நன்றிகளும்.