Thursday, October 27, 2011

*திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பாடப்பெற்ற பாடல்கள் - 1

திருவாசகம்


செத்திலாப்பத்து
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார்
    
   அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம்
என்பர் ஆய் நினைவார் எனைப்பலர்
    
   நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
    
   மரம் கண் என் செவி இரும்பினும் வலிது
தென் பராய்த்துறையாய் சிவலோகா
     
  திருப்பெருந்துறை மேவிய சிவனே. (4)

  •   மெழுகு அம் என்பர் ஆய் – மெழுகு போன்று உருகிய எலும்பை உடையவராகி. 
  •   எனைப்பலர் – வேறு பலரும்.
  •  எற்றினுக்கு – எதற்காக.
  •  வன் பராய் முருடு – கடினமான பராய்மரத்தின் கணு.
  •  மரம்கண் – மரத்தில் செய்ததும் பார்க்க உதவாததுமான கண்.
கருத்து:
பெம்மானே, உன்னிடத்து பக்தி படைத்துள்ள பிரம்மதேவன், விஷ்ணு, வேறு பலர் அருளை நாடி உருகியிருக்க வைத்துவிட்டு என்னை எதற்காக ஆட்கொண்டாய்? என் மனது பராய்க்கட்டை போன்று வலியது. மரத்தில் செய்தது போன்ற என் கண் உன்னைப் பார்க்கத் தகுதியற்றது. காதோ இரும்பினும் கடினமானது.

 திருப்பராய்த்துறை திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணி

அன்பர்களே,
       1940 – ஆம் ஆண்டு மே மாதம் 26 – ஆம் தேதி திருப்பராய்த்துறை ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் பூர்த்தியாகிக் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின் 1998 ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் நாம் அனைவரும் கூடி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றோம். 12 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமாக 31.08.2011 அன்று பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியுள்ளன.

     தபோவன பழைய மாணவர்களும், அன்பர்களும் கும்பாபிஷேக திருப்பணிக்காக நன்கொடையளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
 அன்புடன்,
சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கங்கள்.



 

கும்பாபிஷேகத் திருப்பணிக்கு நன்கொடைகள்

SRI RAMAKRISHNA TAPOVANAM, 
THIRUPPARAITHURAI 

என்ற பெயருக்கு திருச்சியில் மாற்றதக்கவகையில் DD அல்லது Cheque  எடுத்து கீழ்கண்ட ஈரோடு முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80G வரிவிலக்கு உண்டு.

Dr. R. குமாரசுவாமி,
பேபி மருத்துவமனை,
171, நேதாஜி ரோடு,
ஈரோடு – 638 001.
#98427 26272.


No comments:

Post a Comment