Monday, April 23, 2012

*குருகுலத்தில் மாணவர்களைச் சேர்ப்பது சம்பந்தமான அறிக்கை.


ஸ்ரீ விவேகானந்த வித்யாவனக் குருகுல உயர்நிலைப்பள்ளி
திருப்பராய்த்துறை – 639 115,
திருச்சி மாவட்டம்.

          இப்பள்ளியானது காவிரிக்கரையில் பாதுகாப்பான, இனிய இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இக்குருகுலப் பள்ளியில் 4ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலும் உள்ளன. 8-ஆம் வகுப்பிலும் அதற்கு மேல் வகுப்புக்களிலும் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. 4,5,6,7-ஆம் வகுப்புக்களில் மட்டும் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.  புதிய மாணவர்களைச் சேர்க்க விரும்புவோர் மே மாதம் 3ஆம் தேதி காலை 7-00 மணிக்குள் மாணவர்களுடன் குருகுலத்துக்கு வரவேண்டும். வரும்பொழுது மாணவரின் புகைப்படங்கள்(Passport Size) இரண்டு மற்றும் பிறந்தநாள் சான்றிதழுடன் வர வேண்டும். மற்ற நாட்களில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. இதற்கு விண்ணப்பங்கள் எதுவும் அனுப்ப வேண்டியதில்லை.
          மாணவர்களை எடுத்துக்கொள்வதாக அறிவித்தவுடன் பொறுப்புத் தொகை ரூ3000/-, சாமான்கள் பொருட்டு ரூ4000/-, நிர்வாகம் மற்றும் இதர செலவுகளுக்காக 3500/- ஆக ரூ10,500/- உடனடியாகச் செலுத்தி குருகுலத்தில் மாணவனைச் சேர்த்துவிட வேண்டும். இங்கு இடம் கிடைத்த பிறகு முன்பு படித்த பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கித் தந்தாக வேண்டும்.
          குருகுலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட புதிய மாணவர்களை மாற்றுச்சான்றிதழ்களுடன்(Transfer Certificate) மே மாதம் 31ஆம் தேதி காலை 10-00 மணிக்குள் குருகுலத்திற்குக் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும். உணவு, நிர்வாகச் செலவு, மராமத்து, அபிவிருத்தி மற்றச் செலவுகளுக்கு மாதம் குறைந்தது ரூ1800/- ஆகும். இலவசமாகவோ, குறைந்த செலவிலோ மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. போதனா மொழி தமிழ்.
         
குருகுல பள்ளியின் சிறப்பு அம்பசங்கள் வருமாறு:
1.   திட்டமிடப்பட்ட அன்றாட வாழ்க்கை நடைமுறை.
2.   பிரார்த்தனை, தியானம் முதலியவற்றில் பயிற்சி.
3.   பத்தாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி.
4.   சமய விழாக்களும், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரது விழாக்களையும் கொண்டாடுதல்.
5.   கட்டாய ஸம்ஸ்கிருதக் கல்வி, ஹிந்தி மற்றும் பகவத்கீதை பாராயணம்.
6.   கட்டாய உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கள். 5 ஏக்கரில் மைதானம் மற்றும் ஜிம்னேசியம்.
7.   இயற்கைச் சூழலில் அமைந்த வகுப்பறைகள்.
8.   இசை, நாடகம், ஓவியம் மற்றும் நுண்கலைகள் ஆகியவற்றில் சிறப்பான பயிற்சி.
9.அனைத்து மாணவர்களும் கட்டாயம் நீந்தல் பயிற்சி பெறுவதற்கான 25மீ.x12.5மீ. நீச்சல் குளம்.
10. ஒவ்வொரு வகுப்பிலும் 30 மாணவர்கள் மட்டும் இடம்பெறுவார்கள். பின் தங்கிய மாணவர்களுக்கென தனி வகுப்புக்கள்.
11.தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றிற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புக்கள்.
12.அனைத்து வசதியோடு கூடிய அறிவியல் ஆய்வுக்கூடம்.
13.உயர்ந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வகுப்புக்கள்.
14. 4முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பிரத்தியேகமான கம்ப்யூட்டர் ஆய்வுக்கூடத்தில் ஒருவருக்கு ஒரு கம்ப்யூட்டர் என்ற விகிதத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
15.சமையல் பயிற்சியும் மாணாக்கர்களுக்குத் தரப்படுகிறது.
16.மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஐக்கிய வழிபாடும் விருந்தும் நடைபெறுகின்றன. அதன் பிறகு மாணவர்கள் பங்குபெறும் ஆன்மிகம், தேசபக்தி உணர்வூட்டும் நாடகங்கள் நடைபெறுகின்றன.
17.இலக்கிய மன்றங்கள் மற்றும் இலக்கிய மலர் வாயிலாக மாணவர்கள் தனித்திறன் மற்றும் படைப்பாற்றல் வெளிக்கொணர்தல்.
18.தடையில்லா மின்சாரம் வழங்க அதிக குதிரைத்திறன் கொண்ட ஜெனரேட்டர்.
19. ஜூடோ, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளுக்கு சிறப்பான பயிற்சி.
20.அரியவகை மூலிகைகள் அடங்கிய மூலிகைத் தோட்டம்.

மேலும் விவரங்கள் பெற விரும்புவோர் ரூ20/- தபால் வில்லையுடன் அல்லது மணியார்டர் அனுப்பிவைத்து வித்யாவன குருகுல சட்டதிட்டங்கள் அடங்கிய புத்தகம் பெற்றுக்கொள்ளவும்.

முக்கியக் குறிப்பு: பிற மாநில, பிற நாட்டு மாணவர்களுக்கு அனுமதியில்லை.

குருகுலச் சட்டதிட்டப் புத்தகம் பெற அணுக வேண்டிய முகவரி:

செயலர்,
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை – 639115.
திருச்சி மாவட்டம்
போன்: 0431-2614351.

No comments:

Post a Comment