Tuesday, October 16, 2012

*அறிவிப்பு



நம்முடைய குருகுலத்தின் பழைய மாணவர்களின் சார்பாக, பூஜித்தற்குரிய நமது குலபதி தவத்திரு. சித்பவானந்த சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிரந்தரக் கண்காட்சி ஒன்று தபோவனத்தில் வைக்கப்பட உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் பெரிய சுவாமிகள் பயன்படுத்திய அறைகளில் இக்கண்காட்சி நிலையாக வைக்கப்படும். இதற்கு சுமார் ரூ.2 லட்சம் செலவாகலாம். பழைய மாணவர்களும், அன்பர்களும் இக்கைங்கர்யத்துக்காக மனமுவந்து நிதியளிக்குமாறு வேண்டுகிறோம். நமக்குக் கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பு.

இக்கண்காட்சி அமைப்பதற்காக அடிப்படைப் பணிகள் மதுரை சித்பவானந்தர் சேவா சங்க அலுவலகமான ஸ்ரீ சாரதா சமிதியில் நடந்து வருகின்றன. இக்கண்காட்சி டிசம்பர் 28,29 மற்றும் 30 தேதிகளில் திருநெல்வேலி ஸ்ரீ சாரதா கல்லூரியில் நடைபெறவுள்ள R.V.S. பக்தர்கள் மாநாட்டில் வைக்கப்பட்டு அதன் பிறகு தபோவனத்தில் நிரந்தரமாக வைக்கப்படும்.

இதற்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 80-G வரிவிலக்கு உண்டு. ரசிதும் வழங்கப்படும். நிதி அனுப்புபவர்கள்
SRI RAMAKRISHNA TAPOVANAM
SRI SARADA SAMITHI, MADURAI
           
என்ற பெயருக்கு Demand Draft/Cheque ஏதேனும் ஒன்றை மதுரையில் மாற்றத்தக்கதாக எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு உங்கள் நன்கொடைகளை  அனுப்புங்கள். நேரிலும் செலுத்தலாம்.

முகவரி:
ஸ்ரீ சாரதா சமிதி,
1C, மடம் சந்து,
L N P அக்ரஹாரம்,
சிம்மக்கல்,
மதுரை - 625 001.
தொலைபேசி: 0452 - 2621360.
இப்படிக்கு,
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன பழைய மாணவர்கள் சங்கம்,
திருப்பராய்த்துறை.

No comments:

Post a Comment