Tuesday, July 19, 2011

*தேவைக்கு மேல் வேண்டாம்

இராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி சமாதி அடைந்த இடத்தில் தாயுமானவர் தபோவனம் அமைக்க சித்பவானந்த சுவாமிஜி விருப்பம் கொண்டார். அதற்குப் பல லட்சங்கள் தேவைப்பட்டன. இத்தனை லட்ச ரூபாயில் இவ்வளவு நாட்களுக்குள் தபோவனத்திற்கான கட்டிடங்களை கட்டி முடிப்பது என்று தீர்மானமும் செய்யப்பட்டது.

அதற்குத் தேவையான நிதியுதவி அளிக்கும்படி சுவாமிஜி ‘தர்மசக்கரம்’ பத்திரிக்கையில் ஒரு ‘வேண்டுகோள்’ விடுத்தார். தேவையான நிதி குறிப்பிட்ட காலத்திற்குள் குவிந்தது. தேவைக்கு மேற்பட்டும் நிதி வரத்துவங்கியது. உடனடியாக ஒரு அறிவிப்பு அதே பத்திரிக்கையில் ‘தாயுமானவர் தபோவனத்திற்கு தேவையான நிதி சேர்ந்துவிட்டது. இனி அன்பர்கள் நிதி அனுப்ப வேண்டாம்’ என்று வந்துவிட்டது.

எவ்வளவு பணம் வந்தாலும் எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் துடிக்கும் இன்னாளில் இப்படியும் ஒரு மனதுடைய தவமுனிவர்.

No comments:

Post a Comment