Friday, August 26, 2011

*தாருகாவனேஸ்வரர் கோயில் பாலாலயம்

காவிரித் தென்கரையில் கோயில் கொண்டுள்ள திருப்பராய்த்துறை பசும்பொன்மயிலாம்பிகை சமேத ஸ்ரீதாருகாவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு மஹாகும்பாபிஷேகம் சித்பவானந்தர் நூற்றாண்டு விழா தருணத்தில் நிகழ்ந்தது. அப்போது அன்பர்களும் பழைய மாணவர்களும் இணைந்து இத்திருப்பணியை மேற்கொண்டோம். மீண்டும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு திருப்பராய்த்துறை திருக்கோயிலின் திருப்பணிகள் துவங்கவுள்ளன. இதன் முதற்கட்டமாக பாலாலயம் நிறுவும் திருப்பணி வருகிற 31.08.2011, புதன்கிழமை காலை 5:30 மணி அளவில் நிகழவுள்ளது. பழைய மாணவர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
                                                
    இங்ஙனம்,
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை.

No comments:

Post a Comment